தஞ்சாவூர்: புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகில், நாட்டாணி
கிராமத்தில், 10ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து நந்தியும்,
சிவலிங்கமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, சரஸ்வதி மஹால்
தமிழ்ப்பண்டிதர் மணி.மாறன் கூறியதாவது:
தஞ்சையில், கோட்டைச்சுவரின்,
நீர் அரணாகத் திகழும் அகழியுடன் கூடிய கோநகரமாக திகழ்ந்தது வல்லம்.
வல்லத்தின் புறநகர் பகுதியாக விளங்கிய ஊர் நாட்டாணிம். தஞ்சையிலிருந்து
திருச்சி செல்லும் சாலையில், வல்லத்தை கடந்து தென்புறமாக பிரிந்து செல்லும்
சாலையில், நாட்டாணி உள்ளது.
இவ்வூரின் மேற்கில் படத்தாளத்தியம்மன் கோவில்
அமைந்துள்ளது. கோவில் திடலிலிருந்து, சில மீட்டர் தொலைவில்,
காட்டுப்பகுதிக்குள் சோழர் காலத்து நந்தியும், சிவலிங்கமும் காணப்படுகிறது.
அம்மன் கோவில் அருகே, சிதிலமடைந்த நிலையில் விநாயகர், அம்மன் சிற்பங்கள்
காணப்படுகின்றன.
இவையும் சோழர் காலத்தைச் சேர்ந்தவை. இப்பகுதி, சங்க காலம்
முதல், பிற்கால சோழர்களின் காலம் வரை மிகவும் சிறப்புற்று திகழ்ந்திருக்க
வேண்டும். இங்கு ஏற்பட்ட இயற்கைப் பேரழிவால் கோவில் முழுவதும் அழிவுற்று,
இந்த நந்தியும், சிவலிங்கமும் மட்டுமே காணப்படுகிறது. இவ்வாறு
தெரிவித்தார்.
நன்றி : தினமலர், 20.10.2014
No comments:
Post a Comment